Saturday 25 April 2015

ஐ.பி. என்ற மத்திய உளவுத்துறையின் குடியுரிமை அட்டை – நீலகேனியின் ஆதார் அட்டையை மீறிவிட்டது.

வ்வொரு இந்திய குடிமகனும் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் ஓர் அடையாள அட்டையை கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தகவல் தொழில் நுட்ப வல்லுனரும் இன்போசிஸ் நிறுவனத்தின் இணைத் தோற்றுனருமான திரு. நந்தன் நீலகனி அவர்களின் எண்ணத்தில் உதயமான யோசனை தான் மக்களின் கைரேகை, விழி ரேகை போன்ற பயோமெட்ரிக் தகவல்களை சேகரித்து அவர்களுக்கென தனியான அடையாள அட்டையை வழங்குவது.

இது இப்போது பொது வழக்கில் ஆதார் அட்டை என அழைக்கப் படுகிறது. இந்த யோசனை இந்திய அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்டது. 2009இல் இந்திய தனி அடையாள அட்டை ஆணையு ரிமையகம் ஏற்படுத்தப்பட்டு திரு.நீலகனி அவர்கள் அதன் தலைவராக்கப்பட்டார்கள்.

ஆரம்பமாக 16 மாநிலங்களை தேர்வு செய்து UIDAI இதனை ஆரம்பித்தது. அதில் ஐந்து புள்ளிகளை மையப்படுத்தி இந்த பையோமெட்ரிக் தகவல்கள் ஒவ்வொரு தனியாரிடமிருந்து (பொதுமக்கள்) முறையாக பெறப்பட்டன. அதில் முகவரி, வயது போன்ற இந்த விடயத்திற்கு தேவையான முக்கிய தகவல்கள் பெறப்பட்டன.

திரு. நிலேகனியின் நோக்கம் நேர்மையானது. அதேபோல மக்களும் இது போன்றதொரு பல்வகை தேவைகளை பூர்த்தி செய்யும் தனி அடையாள அட்டையை எதிர்ப்பார்த்து கொண்டிருந்ததன் காரணத்தால் இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக குறகிய காலத்திற்குள் 200 மில்லியன் மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டது.

இந்த பணியின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க இந்த அட்டையை பெற வேண்டியதன் அவசியம் அதன் பழங்கள் போன்றவை ஊடகங்களில் இடம் பெற ஆரம்பித்தன. ஊடகங்களில் சில பகுதிகள் எதிர்காலத்தில் புதிய வங்கி கணக்குகள் ஆரம்பிக்கவும், பழைய வங்கி கணக்குகளுக்கும், ஆதார் அட்டை தேவை என செய்திகளை வெளியிட்டன.

நிரந்தர்கா கணக்கு எண் (PAN) அட்டைகளும் ஆதார் அட்டையுடன் இணைக்கப் படும் எனவும் செய்திகளை வெளியிட்டன. இந்திய சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை இலட்சியமாகக் கொண்ட ஐ.பி. என்ற மத்திய உளவுத்துறைக்கு மக்கள் அனைவரின் பொருளாதார தகவல்களை அதன் பதிவுகளை பெறுவதற்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. இதனுள் எப்படி மூக்கை நுழைக்கலாம் என சிந்திக்க ஆரம்பித்தது.

ஐ.பி. என்ற மத்திய உளவுத்துறைக்கு இப்போது ஒரு மிகப்பெரிய யோசனை தென்பட்டது. அது தேசிய மக்கள் தொகை பதிவேட்டை தயாரிப்பது மற்றும் சிப் - உட்பொதிந்த பல்வேறு தேவைகளுக்கான அடையாள அட்டையை விநியோகிப்பது.

இதனை செயல்படுத்த இந்திய பொதுப் பதிவாளர் அலுவலகத்தை உபயோகித்துக் கொள்வது என முடிவெடுத்தது. RGI இன் வேலை அதன் பொறுப்பு என்னவென்றால் மக்கள் தொகை தகவல்களை பராமரிப்பது மற்றும் முறையான இடைவெளியில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவது. அதற்கு இது ஓர் இமாலயப் பணி.

RGI மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கீழ் இயங்கியதனால் ஐ.பி. என்ற மத்திய உளவுத்துறை வேலை சுலபமாகிப் போனது. ஏனெனில் ஐ.பி. மத்திய உள்துறையின் கீழ் வந்தாலும் நடப்பில் மத்திய உள்துறையின் கீழ் உள்ள எல்லாமே ஐ.பி. என்ற மத்திய உளவுத்துறைக்கு கீழ் வந்து விடும்.

ஐ.பி. என்ற மத்திய உளவுத்துறை அரசாங்கத்தின் அனுமதியின்றி (ஐ.பி.-க்கு  எதற்காகவும் யாருடைய உதவியும் தேவையில்லை) RGI – ஐ இதற்காக பணித்தது. அதில் குரியுரிமை அட்டை வழங்குவதற்காக ஆதார் அட்டையில் மக்களிடம் தகவல்கள் ஐந்து வகைகளில் எடுக்கப்பட்டது போல அல்லாமல் பதினைந்து வகைகளில் பயோமெட்ரிக் தகவல்கள் எடுக்க பணிக்கப்பட்டது. ஏற்கனவே பல பொறுப்புகளை சுமந்து கொண்டிருந்த RGI க்கு இது ஓர் இமாலயப்பணி. எனினும் அது ஐ.பி. என்ற மத்திய உளவுத்துறையை மறுத்து பேசுவதற்கில்லை. விளைவு, பல மாநிலங்களில் RGI இந்த தகவல்களை சேகரிக்கும் பணியை ஆரம்பித்தது.
இது திரு. நிலேகனி அவர்களையும் மாநில அரசுகளையும் ஆச்சரியப்படுத்தியது. குழப்பியது. மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு வேலையை காப்பியடிப்பது போன்ற மற்றொரு வேலை ஏன் ஆரம்பிக்கப்படுகிறது என்பதை யாரும் அறிந்துகொள்ள இயலவில்லை. திரு. நிலேகனி அவர்கள் இந்த விடயத்தை UIDAI இன் அமைச்சரவை குழுவின் தலைவரான பிரதம மந்திரியிடம் எடுத்து சென்றார். பிரதம மந்திரிக்கு அதிர்ச்சிதான். ஆனாலும் அவரால் இதனை தடுத்து நிறுத்த இயலவில்லை. ஏனெனில் இது ஐ.பி. என்ற மத்திய உளவுத்துறையின் திட்டம்.

இறுதியில் அவர் ஜனவரி 2012 இல் இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்தாய்வு கூட்டத்தை நடத்தினார். அதில் வினோதமான சமரச சூத்திரம் தீர்வாக பெறப்பட்டது.

    1.ஏற்கனவே பணியாற்றிக் கொண்டிருக்கும் 16 மாநிலங்களில் தன் பணியை தொடரும். மீதமுள்ள மாநிலங்களில் RGI பயோமெட்ரிக் தகவல்களை பெரும் வேலையை செய்யும்.
2.UIDAI பணியாற்றிக் கொண்டிருந்தாலும் கூட நாடெங்கும் RGI முகாம்களை அமைக்கும்.3.குடியுரிமை அட்டை பெறுவது கட்டாயமாக்கப்படும். UIDAI விருப்பப் படுபவர்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் குரியுரிமை ஆட்டையில் UIDAI ஆல் உருவாக்கப்பட்ட ஆதார் எண் அதில் இருக்கும்.

2013 இல் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட UIDAI மசோதாவும் புதிரானதே. அது இவ்வாறு கூறியது; “ஆதார் அட்டை இந்தியாவின் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் வழங்கப்படும். ஆனால் அது குடியுரிமையை வழங்காது.”

மற்றொரு வார்த்தையில் சொல்வதென்றால் மக்கள் RGI இன் குடியுரிமை அட்டையையும், ஆதார் அட்டையுடன் வைத்திருக்க வேண்டும். ஆதார் அட்டை கட்டாயமற்றதாகவும் குடியுரிமை அட்டை கட்டாயமானதாகவும் ஆக்கப்படும். ஆனால் கேள்வி என்னவென்றால் ஏன் இந்த நகல் எடுக்கும் இரட்டைப் பணி?

ஐ.பி. என்ற மத்திய உளவுத்துறையின் பிராமணிய சித்தாந்தத்தை அதன் கொள்கையை நன்றாக அறிந்தவர்களுக்கு இதற்கான விடை எளிமையானது.

இந்திய மக்களை அவர்களின் வாழ்வின் அனைத்து பாகங்களிலும் கட்டுப்படுத்த அவர்களின் தனி உரிமையில் தலையிட ஐ.பி. விரும்புகிறது. இதன் மூலம் அரசியல் அதிகாரத்தை அடையா மலேயே பிராமனிஸ்டுகள் இந்த தேசம் முழுவதையும் கட்டுப்படுத்த இயலும்.


பயோமெட்ரிக் முறையில் எடுக்கப்படும் இந்த 15 வகையான தகவல்கள் ஐ.பி. ஆல் உருவாக்கி தரப்பட்டது. இதன் மூலம் நாட்டின் எந்த வல்லமை மிகுந்தவரின் தகவலும் அவரின் பொருளாதார பண பரிவர்தனைகள் ஐ.பி. என்ற உளவுத்துறையின் கைகளுக்கு சென்றுவிடும். ஒரு பொத்தானை அமுக்கும் நேரத்தில் நாட்டின் மிக உயர்ந்த மனிதர்களின் தகவல் ஐ.பி. ஆல் பெறப்படும். இந்த தகவல் தேவைப்படும் போது ஐ.பி. ஆல் உபயோகப்படுத்தப்படும். ஏன் நமது அரசாங்கம் ஐ.பி. இன் இந்த சதி திட்டத்தை புரிந்து கொள்ள மறுக்கிறது.

ஆதாரம் : 26/11 விசாரணை நீதித்துறையின் மயங்கியது ஏன்? பக்கம் 321 முதல் 325, ஆசரியர் எஸ்.எம். முஷ்ரிஃப (முன்னாள் ஐ.ஜி. மகாராஸ்டிரா மற்றும் ஆசரியர் கர்கரேயை கொலை செய்தது யார்?)

இந்த நூல் தற்போது தள்ளுபடி விலையில் 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வாசகர்கள் கீழ்கண்ட எண்ணை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளவும். இன்ஷா அல்லாஹ்.




Tuesday 20 January 2015

மீத்தேன் திட்டம் ஒரு பார்வை

கோ.வரதராஜன்

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு.

வையாக தொழில்களிலேயே வயற்றுக்கு சோறு போடும் தொழில் தான் வணங்கத்தக்கது என்பது நம் முன்னோர் மொழி. அத்தொழிலுக்கு அடிப்படையான விவசாயம் என்பது காவிரி படுகையில் ஒரு கலாச்சாரமாகவே இங்கு இருந்து வருகிறது. அதுவும் இங்கு நடந்த விவசாயம் பற்றி மிக பெரிய இலக்கிய வரலாற்று சான்றுகளும் உண்டு அப்படி வியக்க வைக்கும் விவசாய முறைகள் இரத்த நானங்களை போன்ற ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள் விவசாய நிலங்களையே பரிசோதனை கூடங்களாக பயன்படுத்தி புதிய புதிய நெல் ராகங்களை உருவாக்கிய மூத்த விவசாயிகளின் ஆராய்ச்சிகள் இப்படி ஏராளமான பெருமைக்கு உரிய நிலமாக இந்த காவேரி படுகை இருந்து வருகிறது. இங்கு பல்வேறு சமூக பிரிவுகள் இருந்தாலும் எல்லோருக்கும் நிலம் தான் தாயாக இருக்கிறது. இந்த மண் இங்குள்ள ஒவ்வொரு மனிதனின் இரத்தமும் சதையிமாய் இருக்கிறது. இப்படி பல்வேறு பெருமிதங்கள் கொண்ட இம்மண்ணில் காலம் காலமாக விவசாயம் செய்த மனிதர்கள் தற்பொழுது தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலைக்கு அரசு அவர்களை தள்ளி இருக்கிறது. விளை நிலத்தால் வாழ்தவர்கள் விளை நிலத்தால் வீழ்துபோகும் அவலம் மத்திய மாநில அரசுகளின் தவறான கொள்கை நிலைபாடும் விவசாயிகளின் கண்டுகொள்ளாத போக்கும் தான் காரணம், விவசாயத்திற்கு தண்ணீர் கேட்டு போராடிய எம் மக்கள் விதை கேட்டு போராடிய எம் மக்கள் உரம் கேட்டு போராடிய எம் மக்கள் தங்கள் நிலத்தை அரசாங்கம் அந்நிய நிறுவனத்திற்கு தாரை வார்த்து கொடுத்து விட்டது என்கின்ற செய்தியை கேட்டதிலிருந்து ஏழைகள் நிலத்தை எங்களிடமே கொடுத்து விடுங்கள் என்று அரசுக்கெதிராக போராடி வருகின்றார்கள், அந்நிய நிறுவனமான கிரேட் ஈஸ்டர் எனர்ஜி கம்பனி லிமிடட் காவிரி படுகை நிலங்களில் உள்ள நிலக்கரி படிமங்களில் இருந்து மீதேன் எடுக்க போகிறது என்கிற செய்தி இங்கு உள்ள ஒவ்வொரு மனிதனின் ஆள் மனதிலும் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பாண்டிச்சேரி அருகே உள்ள பாகூர் தொடங்கி ஸ்ரீமுஸ்னம், நெய்வேலி, ஜெயம்கொண்டசோழபுரம் வழியாக மன்னார்குடி வரை காவேரி பதிகையில் நிலக்கரி படிமங்கள் பெரும் அளவில் உள்ளது. இந்த நிலக்கரி இடுக்குகளில் மீத்தேன் என்னும் ஏறிவாயு உள்ளது. நிலக்கரி இடுக்குகளில் இருக்கும் மீத்தேன் எரிவாயுவை எடுப்பதற்கு கிரேட் ஈஸ்டர் எனர்ஜி கார்பரேசன் லிமிடெட் (great easter energy co-orperation limited)  நிறுவனத்திற்கு மத்திய அரசு 2010-ல் ஒப்பந்தம் செய்ததுள்ளது. அதை தொடர்ந்து தமிழக அரசும் 4-1-2011-ல் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததுள்ளது. ரூ.3600 கோடி முதலீடு செய்து ரூ.60000 கோடி லாபம் ஈட்டக் கூடிய இந்த ஒப்பந்தம் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் சில கோடிகள் கொடுத்து காவேரி படுகையை பாலைவனம் ஆக்க துடித்து கொண்டிருக்கின்றது.


     மொத்தம் 691சதுர கி.மி பரப்பில் 667 சதுர கி.மி பரப்பில் மீத்தேன் எரிவாயும், 24 சதுர கி.மி பரப்பில் நிலக்கரி எடுக்கவும் இருகின்றார்கள். 2000 இடங்களில் துளையிடப்பட்டு கிணறு அமைக்க உள்ளார்கள். தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம் வட்டங்களிலும் திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வலங்கைமான் வட்டங்களிலும் கிணறு அமைக்க படும். முதற்கட்டமாக தஞ்சை மாவட்டத்தில் 12 கிணறுகளும் திருவாரூர் மாவட்டத்தில் 38 கிணறுகள் அமைக்கபடும். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பகுதியில் 500 அடி முதல் 1600 அடி ஆழம் வரை நிலகரி படிமங்கள் உள்ளது. இந்த படிமங்களின் இடுக்குகளில் இருக்கும் மீத்தேன் வாயுவை எடுக்க முடியும். அதனால் 1500 அடி வரை உள்ள நீர் முழுமையாக வெளியேற்ற வேண்டும். அப்படி செய்யும் போது மேல் மட்டத்தில் உள்ள நீர் கீழ் நோக்கி இறங்கி விடும். இந்த நீரும் மீத்தேன் எடுக்கும் போது வெளியேற்ற படும். மீத்தேன் எடுப்பதற்காக நிலக்கரி படிமங்களை சுக்குநூராக உடைத்து நொறுக்குவதற்கு பயன்படுத்த படும் தொழில்நுட்பம் மிக ஆபத்தானதாகும். நீரியல் விரிசல்(Hydralic fracturing)எனப்படும் இந்த தொழில்நுட்பத்தை தான் இங்கு பயன்படுத்த உள்ளார்கள். உலக நாடுகள் பலவற்றில் நீரியல் விரிசல்(Hydralic fracturing) தொழில்நுட்பதிற்கு எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து கொண்டு இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.       
    2000 அடி வரை துளையிட்டு குழாய் இறக்கி அங்கிருந்து பூமிக்கடியில் பக்கவாட்டில் மூன்று கிலோமீட்டர் அளவிற்கு துளையிடுவார்கள். இப்படி எல்லா திசைகளிலும் பக்கவாட்டில் குழாய்களை செலுத்திவிடுவார்கள் துளையிட்ட பின் 600 வகையான வேதி பொருட்களை மணலுடன் கலந்து அதிக அழுத்தத்துடன் இந்த குழாய்களுக்குள் செலுத்தி நிலக்கரி படிமங்களை சிறு சிறு துகள்களாக சிதர செய்வார்கள். பின்னர் உட்செலுத்திய கலவையோடு மீத்தேனை உரிந்து எடுப்பார்கள். உட்செலுத்தப்படும் 600 வகையான வேதி பொருட்களில்(B tex) எனப்படும் மிகக்கொடிய யுரேனியம், ஈயம், ரேடியம், மெத்தனால், ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஃபார்மல்-டி-ஹைட்ரேட் மற்றும் பென்சின் கார்சிநோஜென் கலவைகளும் மற்றும் பெயர் வெளியிடாத பல வேதிப்பொருட்களும் இதில் இருப்பது தான் ஆபத்தானது. இப்படி உட்செலுத்தப்படும் இந்த கலவை முழுமையாக வெளியில் வராமல் மண்ணோடும் நீர் தொகுப்போடும் கலந்து மிகப்பெரிய பாதிப்புகளை அந்த பகுதிகளில் ஏற்படுத்தும்.

மீத்தேன் எரிவாயு எடுக்கபட்டால் நாம் இழக்க வேண்டியவைகள் ஏராளம்:

1. நிலத்தடிநீர் ஒட்டுமொத்தமாக உறிஞ்ச படுவதால் விவசாயம் செய்ய இப்போது இருக்கும் மிச்ச சொச்ச நீரும் பிற்காலத்தில் கிடைக்காமல் வறட்சி ஏற்பட்டு விவசாயம் என்பதே கேள்விக்குறியாய் போகும் அவல நிலைக்கு தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவேரி படுகை தள்ளப்படும்.

2. மீத்தேன் எடுப்பதற்காக உறிஞ்சி வெளியே கொட்டப்படும் நீர் கடல் நீரை விட பன்மடங்கு உப்புத் தன்மை கொண்டது. இது வெளியே கொட்டப் படும்போது ஆறுகளிலும் குளங்களிலும் கலந்து விவசாய நிலங்கள் உப்பலங்களாக மாற்றிவிடும்.

3. மீத்தேன் எடுக்கும் போது நிலத்தில் இருக்கும் குடிநீரோடு கலந்து மீத்தேன் வாயு வரும் ஆபத்து இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் எண்ணெய் குழாயில் ஏற்பட்ட கசிவால் குடிநீர் தீ பற்றி எரிந்ததை நாம் அறிவோம். அது போல் மீத்தேன் எடுக்கப்படும் குழாய்களில் கசிவு ஏற்பட்டால் அந்த நீரானது நம் சுற்றுபுரத்தோடு கலந்து சுகாரத்தை கேள்விகுறியாக்கும்?

4. நிலத்தின் அடியில் நெருக்கமாக தோண்டி வெடி வைப்பதால் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் பூகம்பம் ஏற்படக்கூடிய ஆபத்துகளை இந்த வெடிவைப்பு உருவாக்கும்.

5. மீத்தேன் எரிவாயுவை கொண்டு செல்ல குழாய் பதிப்பது, சாலை அமைப்பது போன்ற பணிகளை செய்யும் போது நமது விவசாய நிலங்கள் இன்னும் பாதிப்படையும். இந்த குழாய்களில் கசிவு ஏற்பட்டாலோ அல்லது உடைந்துபோனாலோ ஒருபுறம் நமது சுற்றுசூழல் மாசுபடும் மறுபுறம் தனது தொழில்நுட்ப கோளாறுகளை மறைக்க குழாய்களில் ஏற்பட்ட சேதத்திர்காக தனது வாழ்வாதாரத்தை காப்பதற்காக போராடும் மக்களின் மீதே தீவிரவாத வழக்கு போடவும், தேச விரோத செயல் என அப்பாவிகள் மீது குற்றம் சுமத்தவும் வாய்ப்புள்ளது. இத்தகைய கொடூரமான மக்கள் விரோத செயலை தான் நாடுமுழுவதும் வாழ்வாதாரத்தை காப்பதற்காக போராடும் அப்பாவி மக்களுக்கு எதிராக ஆளும் அரசுகள் தொடர்ந்து செய்து வருகின்றது.

6. போராட்டங்களை நசுக்க செய்யும் பசப்பு வார்த்தையான வேலைவாய்ப்பும் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு கிடைக்க அறவே வாய்ப்பில்லை. தொழில்நுட்ப அறிவு உள்ளவர்களால் மட்டுமே இந்த பணியை செய்ய முடியும் எனக்கூறி நம்மவர்களை அந்த நிறுவனங்கள் புறக்கணித்துவிடும்.
7. புற்றுநோய், தோல் நோய், சுவாச கோளாறு, மரபணு மாற்று கோளாறுகள், மூலை நரம்பு கோளாறுகள் என பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

8. மீத்தேன் வாயுவையும், நீரையும் நிலத்தில் இருந்து வெளியேற்றிவிட்டால் கிழே ஏற்படும் வெற்றிடத்தில் கடல் நீர் உட்புகுந்து குடிநீர் உப்பு நீராக மாறி குடிநீர் இல்லாத நிலையை ஏற்படுத்தும்.
9. தஞ்சை மாவட்டத்தில் 8வட்டங்கள், திருவாரூர் மாவட்டத்தில் 7வட்டங்கள், மற்றும் நாகை மாவட்டத்தில் 8வட்டங்களில் வாழும் 53இலட்சம் மக்களும் காவேரி படுகையில் உள்ள கிட்ட தட்ட இரண்டு கோடி மக்களும் வாழ இடமில்லாமல் வேறு வாழ்விடம் தேடி அகதிகளாக மாறும் அபாய நிலை ஏற்படும்.

இப்படியாக இன்னும் ஏராளமாகவும் தாரளமாகவும் பட்டியலிடலாம். அரசால் தீட்டபடுகின்ற திட்டங்கள் மக்களுக்கானதாக இருக்க வேண்டும் அல்லது மக்களின் வாழ்வியலை சிதைக்காமல் இருக்க வேண்டும்.
மக்களுக்கான அரசு என்றால் அது தான் வகுக்கும் திட்டங்களை மக்களின் வாழ்வாதாரங்களை கவனத்தில் கொண்டு தீட்ட வேண்டும் அப்படி இல்லாமல் மக்களை காவு கொடுத்து பன்னாட்டு நிறுவனங்களை வளர்க்க நினைக்கும் ஒரு முதலாளித்துவ அரசு எப்படி மக்களுக்கான அரசாக இருக்க முடியும்.

ஆரோக்கியமான மண் என்பது உயிருள்ள ஒரு அமைப்பு அதை சிதைத்துவிட்டு இயற்கையை எப்படி பாதுகாக்க முடியும். எதிர்கால இந்தியாவின் மக்கள் தொகைக்கு ஏற்ப இங்கு உணவு உற்பத்தி செய்யப்பட வேண்டும் அதற்கு தரிசு நிலங்களை கூட விளைநிலங்களாக மாற்றி விவசாயம் செய்யபட வேண்டும், இப்படியாக உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உணவு உற்பத்தி மண்டலமாகவும் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக இருக்கின்ற காவேரி படுகையை சிரழித்து எண்ணெய் உற்பத்தியும், மீத்தேன் வாயுவும், நிலகரியும் எடுபதற்கு விளைநிலங்களை கொடுப்பது மக்களுக்கு அரசு செய்யும் துரோகமாகும் எனவே உடனடியாக அரசு இந்த மாபாதக திட்டத்தை கைவிடவேண்டும். 

வனவிலங்குகளுக்கு பாதுகாக்கப்பட்ட பகுதி இருப்பதுபோல், பறவைகளுக்கு சரணாலயங்கள் இருப்பதுபோல், தொழில் நிறுவனங்களுக்கு தனியாக தொழிற்பேட்டைகள் இருப்பதுபோல் தமிழகத்தின் நெற்களஞ்சியமான இந்த காவேரி படுகையை பாதுகாக்கப்பட்ட விவசாய பகுதியாக அரசு அறிவித்து இந்த தாய் மண்ணை காக்க வேண்டும்! மக்கள் நலம் பாதுகாக்கப்பட வேண்டும்!!

வாசகர் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...........................

Sunday 28 December 2014

8 அண்டுகளுக்குப் பின் மேலும் இரண்டு அப்பாவி முஸ்லிம்கள்?

சுதந்திரதின விழாவைக் குடியரசு தின விழாவென்று டெல்லியைத் தகர்க்கத் திட்டம். வங்காள தேசத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் இரண்டு பேர் கைது.

டெல்லி சிறப்புக் காவலர்கள் அதிரடி சாதனை நாட்டுக்கு வந்த ஆபத்து நீங்கியது காவல்துறை பெருமிதம் விரிவான செய்திகள் இடைவேலைக்குப்பின்..........

இப்படி ஒரு அதிர்ச்சியை நமக்குள் ஏற்படுத்தி நம்மைத் தொலைகாட்சியோடு பிணைத்து இடைவேளை என நமக்கு விளம்பரங்கள் பலவற்றைக் காட்டினார்கள். எப்போது இந்த விளம்பரங்கள் தொலையும்  இந்த செய்தி மீண்டும் வரும் என்று அலுத்துக் கொண்ட நமக்கு செய்திகள் தொடரும் எனச் சொல்லி - இரண்டு முஸ்லிம்களைக் காட்டினார்கள்.

அவர்கள் இருவரும் பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்குள் புகுந்த அபார தீவிரவாதிகள். பங்களாதேஷிலிருக்கும் (HUJI) ஹீஜு என்ற அதிபயங்கர அமைப்பைச் சார்ந்தவர்கள் எனத்தொடங்கி, ஜனவரி 26 ஆம் நாளில், நம் நாட்டில் நடக்கவிருக்கும் குடியரசு தினவிழாவில் பயங்கர தாக்குதலை நடத்த (610 கிராம்) ஒரு கிலோ வெடிபொருட்களுடன் (PETN வகை) அலைந்து கொண்டிருந்தனர். என்று விரித்தார்கள்.

நம் நாட்டு செய்தி நிறுவணங்களுள் ஒன்றான "பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா" (PTI : Press Trust Of India) இந்த செய்திக்கு இன்னொரு முகத்தைத் தந்தது. அது கைதுசெய்யப்பட்ட முஹம்மத் அமீன் வானியும் லுத்தூஃப் உற்றஹ்மானும் பாகிஸ்த்தானிலுள்ள "ஜம்மியத்துல் தஅவா" என்ற அதிசய அமைப்பின் தலைவர் ஹபீஸ் செய்யித் என்பவரிடம் பயிற்சி பெற்றவர்கள். இதையும் நமது தொலைகாட்சிகள் நமக்கு விரிவாக விளக்கிக் காட்டின. ஹபீஸ் ரஹ்மான் தரும் பயிற்சி உலகில் யாரும் விஞ்சிட இயலாத பயிற்சி என்பதை சொல்லாமல் சொன்னார்கள்.

சாதனை படைத்த பெருமையோடு நமது டெல்லி சிற்ப்புக் காவலர்களும் சாய்ந்து தொங்கி முகத்தோடு குற்றம் சுமத்தப்பட்டவர்களும் நமக்கு தொலைகாட்சியில் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டார்கள். அடுத்த நாள் பத்திரிக்கைகளும் டெல்லியை தாக்கிட வந்த முஹம்மத் அமீன்வானி அவர்களையும் லுத்துஃப் ரஹ்மானையும் படம்போட்டுக்காட்டி இவர்களிடமிருந்து டெல்லியை காப்பாற்றிய நமது சிறப்புக் காவல்படையினரை வானாளப் புகழ்ந்திருந்தனர். இதுவெல்லாம் ஜனவரி திங்கள் 4 ஆம் நாள் 2007 ஆம் ஆண்டு நாட்டை உலுக்கிய செய்திகள்.

செய்திகளைப் படிப்பவர்கள் இவர்கள் மீதும் இவர்களின் மூலம் இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை அதிகமாக்கிக் கொள்ள வேண்டும். என்பதற்காக, கதையை இன்னும் கொஞ்சம் அதிகமாக தீர்த்துக் கட்டினர். அது முஹம்மத் அமீன் வானி என்பவரிடம் [ரூபாய் 4,50,000] அதாவது நான்கு இலட்சத்து நாற்பதாயிரம் ரொக்கமாக இருந்தது என்பதே அந்த திகில். இது டெல்லியிலுள்ள சாந்திஸி சவுக் என்னுமிடத்திலுள்ள ஓர் கவ்வாலா - பணமாற்று வியாபாரியிடமிருந்து பெற்றது. இந்த பணம் இந்தியாவின் மீது போர் தொடுப்பதற்காக ஹூஜீ எனும் அமைப்பு கொடுத்தனுப்பியது என்றும் அனல் பறக்கும் செய்திகள்.

அவர்கள் செய்தியில் காட்டிய பரபரப்பு நமக்கு இது உண்மையாகத்தான் இருகும் என்பதைத் தெளிவாகக் காட்டிற்று. எனினும் உண்மைகள் கையில் கிடைக்கும்வரை பொருத்திருப்பதே சிறந்தது எனப்பட்டது. ஆனால் காத்திருப்பது என முடிவு செய்தோம். இப்போது எட்டு ஆண்டுகளுக்குப்பின் அந்த உண்மைகள் கைவரப்பெற்றோம். அதனை இங்கே அப்படியே தருகின்றோம்.

ஹூஜீ என்ற அமைப்பு

ஹூஜீ என்ற அமைப்பின் முழுப்பெயர் ஹரகத்துல் ஜிஹாத் அல் இஸ்லாமி  Harakath Ul Jihad al Islamiya என்றொரு அமைப்பு நமது அண்டை நாடான வங்காள தேசத்தில் இருப்பதாக நமது ஊடகங்கள் நமக்கு சொல்லிக்கொண்டிருக்கின்றன. ஊடகங்கள் சொல்லும் செய்திக்கு ஆதாரமாக நமது உளவுத்துறையைத்தான் ஆதாரமாகக் காட்டுகின்றன. ஆனால் அப்படியொரு அமைப்பு வங்காள தேசத்தில் இல்லையென வங்காள தேச அரசு தொடர்ந்து கூறிவருகிறது. அதுவும் ஆதாரப்பூர்வமான அறிவுப்புகள். [Source : Radiance.viw weekly 26th Oct - 2014] ஆனால் உளவுத்துறையினர் தொடர்ந்து ஹூஜீ என்றொரு அமைப்பை கற்பனையில் உருவாக்கி ஊடகங்கள் வழி ஊரெல்லாம் விளம்பி வருகின்றது.

அப்படியானால் உண்மைதான் என்ன?

டெல்லிய தகர்த்திட வந்த மிகப்பெரிய தீவிரவாதிகளாகக் காட்டப்படுபவர்கள், அப்பாவிகள். அவர்கள் காஷ்மீரை சார்ந்த சாதரண மக்கள். ஆனால் முஸ்லிம்கள். முஸ்லிம் இளைஞர்களே இல்லாத ஒரு காஷ்மீரை உருவாக்கிட வேண்டும். காலப்போக்கில் முஸ்லிம்களே இல்லாத ஒரு காஷ்மீரை உருவாக்கிட வேண்டும் என்பது நமது மத்திய அரசின் திட்டம். இதில் காங்கிரஸ் அரசுக்கும் இப்போது மத்தியில் வீற்றிருக்கும் பாசிச பரிவார, பாரதீய அரசுக்கும் இடையில் எந்த வேற்றுமையுமில்லை. இந்த பொது திட்டத்தின் கீழ் அங்குள்ள முஸ்லிம்களை பல்வேறு சாக்குப்போக்குகளின் கீழ் படுகொலை செய்துவருகின்றார்கள் நமது இராணுவத்தினர். அல்லது காணமலாக்கி வருகின்றார்கள்.

இப்படி படுகொலை செய்யப்பட்டு ஆதரவற்று நிற்கும், குடும்பங்களுக்கு சிலபல உதவிகளைச் செய்து கொண்டிருந்தார்கள் முஹம்மது அமீன் வானியும், லத்தூஃப் ரஹ்மானும். இதனை பொருத்துக்கொள்ள இயலவில்லை நமது இராணுவத்தினரால். இந்த இரண்டு பேர் மீதும் தீவிரவாதிகளுக்குத் துணை போகின்றார்கள் என்ற பொய்க்குற்றச் சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்தார்கள். சில நாட்கள் கஷ்மீர் சிறை, பின்னர் திகார் சிறை, என அலைக்கழித்தப்பின், அவர்களுக்குப் பிணை கிடைத்தது. 2003 ஆம் ஆண்டு அவர்கள் பிணையில் வந்தார்கள் ஆனால் வழக்கு கஷ்மீரிலுள்ள "Kathaa" கத்தா என்னுமிடத்திலுள்ள தலைமை மாவட்ட நீதிபதியின் நீதிமன்றத்திற்கு வந்தார்கள்.

நீதிமன்றத்திற்கு வந்தவர்களை உளவுத்துறையைச் சார்ந்த இரண்டு பேர் பின்தொடர்ந்து வந்தார்கள். அவர்கள் உங்களை விசாரிக்க வேண்டும். நாங்கள் பத்திரிக்கையாளர்கள் என பம்மாத்துக்காட்டிய அவர்கள் இறுதியில் தாங்கள் பத்திரிக்கையாளர்கள் அல்ல. உளவுத்துறையைச் சார்ந்தவர்கள் என்றும் மறுத்தால் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டினார்கள்.

மிரட்டலுக்கு அஞ்சாத அமீன்வானி ஓடிச்சென்று அந்த நீதிமன்றவளாகத்தில் நின்றிருந்த தன் வழக்கறிஞரிடம் நடந்ததை சொன்னார். வழக்கறிஞர் உடனேயே நீதிமன்ற பார்வைக்கு அதனைக் கொண்டு சென்றார். முஹம்மத் அமீன்வானிக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதற்கான மனுவும் உடனேயே தராததால் பாதுகாப்பு வழங்கிடும் உத்தரவு தான் பிறப்பிக்க இயலாது. ஆனால் அமீன்வானியின் உயிருக்கு ஆபத்திருக்கின்றது என்பதை நான் பதிவு செய்து கொள்கிறேன். இஃது உங்களுக்குப் பின்னால் உதவி செய்யும் என்றார் - நீதிபதி.

ஆனாலும் நீதிமன்ற வளாகத்தில் வைத்தே அமீன் வானியும், அவருடைய நண்பர் லுத்துஃபுற் றஹ்மானும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்கக் இருவரையும் டெல்லியில் வைத்து வெடி பொருள்களுடன் கைது செய்ததாக தொலைக்காட்சிகளில் காட்டினார்கள். அமீன்வானியை டெல்லியுள்ள சாந்தினி சவுக்கில் வைத்து கைது செய்ததாகவும் அதுவும் காலை 9.30 மணிக்குக் கைது செய்ததாகவும், அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் லுத்துஃப் ரஹ்மானை மாலை 6.30 மணிக்குக் கைது செய்ததாகவும், குடியரசு தினநாளை அதாவது ஜனவரி 26 ஆம் நாளில் டெல்லி தகர்க்கப்படவிருந்ததாகவும், அதை காப்பாற்றி விட்டதாகவும் கதை கட்டினார்கள். அந்தக் கதையைத்தான் அத்தனை அலங்காரத்தோடும் தொலைக்காட்சிகள் நமக்கு விற்பனை செய்து கொண்டிருந்தன.

குடியரசு தினத்தன்று ஏதேனும் ஒரு விருதும், பணமும், பதவி உயர்வும் கிடைக்கும் என்றுதான் இத்தனை ஏற்பாடுகளையும் செய்தார்கள். ஆனால் முஹம்மத் அமீன் வானியின் வழக்கறிஞர் மாவட்ட தலைமை நீதிமன்றத்தில், பாதுகாப்பு கோரி தாக்கல் செய்த மணு அத்தனையையும் ஒன்றுமில்லாமலாக்கிவிட்டது. டெல்லி சிறப்புக் காவல்துறை அதிகாரிகளும் நமது மத்திய உளவுத்துறையைச் சார்ந்தவர்களும் டெல்லியுள்ள சிறப்பு நீதிமன்றத்தைத் தங்கள் சட்டைப்பைக்குள் வைத்திருக்கின்றார்கள். அதனால் அந்த நீதிமன்றம் முஹம்மத் அமீன் வானி மீதும் லுத்துஃப் ரஹ்மான் மீதும் புணயப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் வரிவிடாமல், நிரூபிக்கப்பட்டன எனக்கூறி இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கினார்கள்.

ஆனால் உயர் நீதிமன்றத்தில் அமீன்வானி, லுத்துஃப் ரஹ்மான் ஆகியோர் சார்பில் தனித்தனியாக வழக்கறிஞரிகள் வைக்கப்பட்டார்கள். அவர்கள் வழக்கை திறம்பட நடத்தினார்கள். அதனால் வானியும், லுத்துஃப் ரஹ்மானும் வழக்கிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டார்கள்.

வழக்கறிஞரின் விவாதங்கள்

குற்றம் சுமத்தப்பட்ட முஹம்மத் அமீன் வானிக்காக டெல்லி உயர் நீதிமன்றத்தில் அசோக் அகர்வால் என்ற வழக்கறிஞர் வாதாடினார். லுத்துஃப் ரஹ்மானுக்காக சித்தார்த் லுதரா என்ற வழக்கறிஞர் வாதாடினார். வழக்கில் அப்பாவி முஸ்லிம்கள் இருவர் புனையப்பட்டிருக்கின்றார்கள் என்பதை உணர்ந்த வழக்கறிஞர்கள் உணர்வும், ஆர்வமும் பொங்கிட அந்த அப்பாவி முஸ்லிம்களுக்காக தங்கள் வாதங்களை வைத்தார்கள்.

வெடி பொருளின் நிறம்

முஹம்மத் அமீன் வானியிடமிருந்து 1.610 கிலோ எடையுள்ள பி..டி.என் [PETN] என்ற வகை வெடிபொருள்களைக் கைப்பற்றியதாக கதை. அந்த வெடிபொருட்கள் பிரவுன் [Brown] நிறம் என்று அடித்துக் கூறினார்கள் டெல்லி சிறப்பு காவல்துறையைச் சார்ந்தவர்கள். அதில் துணை கமிஷனர் சஞ்சீவ் குமார் யாதவ் தான் இதை அறுதியிட்டு உறுதியாக கூறினார். இதை கூறும்போது நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையல்லாமல் வேறெதுவுமில்லை. என்று தன்னுடைய வேத புத்தகத்தின் மேல் கைவைத்துக் கூறினார்.

ஆனால் அவரே தயாரித்த சாட்சிகளில் ஒருவர் வெடிபொருள்கள் கருஞ்சிவப்பாக இருந்தது என்று கூறினார். அவரும் நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையில்லாமல் வேறோன்றுமில்லை என அடித்துக் கூறினார். இருதியில் வெடிபொருள்களைச் சோதிக்கும் நிபுணர்கள், தங்கள் விஞ்ஞான சோதனையின் முடிவை நீதிமன்றத்தில் சொன்னார்கள். அதில் அவர்கள் வெடிபொருள் வெள்ளை நிறத்தில் இருந்தது என்றார்கள். வெடிக்கும் தன்மையுள்ள சில் பொருட்களும் உடனிருந்தது என்றார்கள். அதாவது வெள்ளை நிறத்தில் இருந்ததெல்லாம் வெடிபொருள் அல்ல. வெடிக்கும் தின்மையுள்ள பொருள்களையும், கலந்த கலவை அவ்வளவுதான்.

இதேபோல் கலவைகளை உருவாக்கி அப்பாவி மிஸ்லிம்களின் ஆயுளை பறிப்பதில் நமது உளவுத்துறை மற்றும் டெல்லி சிறப்புக்காவலர்களுக்கு இணையாக யாருமில்லை. இப்போது முஹம்மத் அமீன் வானி, லுத்துஃப் ரஹ்மான் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருள்களின் நிரம் என்பதற்கு மூன்று வகையான வருணங்கள் வரவே நீதிபதி தானே அந்த வெடிபொருளை ஒருமுறை பார்த்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தார். ஆகவே வெடிபொருளைக் கொண்டுவந்து என்னிடம் காட்டுங்கள் எனக் கேட்டார்கள். அதற்கு சற்றும் தாமதிக்காமல் அந்த வெடிபொருள்கள் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபோது தீப்பிடித்து விட்டது எனக்கூறினார்கள்.

கூண்டேறி சாட்சியம் சொன்ன டெல்லி சிறப்புக்காவல்துறை ஆணையரும், அவருக்காக வாதாடிய அரசு வழக்கறிஞரும். அப்படியானால் சாம்பலைக் கொண்டு வாருங்கள் என்றார் நீதிபதி அவர்கள். நீதிபதி அவர்கள் உண்மையைக் கண்டுப்பிடிப்பதில் இவ்வளவு கூர்மையாக இருபபர் என எவரும் நினைக்கவில்லை. திக்குமுக்காடி போனார்கள் டெல்லி சிறப்புக் காவல்துறையைச் சார்ந்தவர்கள். அதுபோலவே சிலையாக நின்றார் அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர். அவர் பெற்ற பணம் அத்தனையும் கஜனாவிற்கு பாழ்.

வேர்த்து வெளுத்து போய் நின்ற அரசு தரப்பு "ஆசாமி"களிடம், நீதிபதி அவர்கள் இன்னொரு கேள்வியையும் கேட்டார். நீதிபதியின் பெயரால் கேட்கின்றேன் பதில் கூறுங்கள். வெடிபொருள்கள் எறியும்போது வெடிக்காதா? - சொற்றால் அடித்த பிண்டங்களாக நின்று கொண்டிருந்தார்கள், பொய்களை வழக்காக ஜோடித்து முஸ்லிம் இளைஞர் வாழ்க்கையை பாழாக்கிடுவதையே தொழிலாகக் கொண்ட மாதோன் மந்தர்கள்.

ஹவ்வால பணம்

முஹம்மத் அமீன் வானியைக் கைது செய்திடும்போது, ரூபாய் 4,50,000 - கையோடு கைப்பற்றியதாக, நமது டெல்லிக் காவல்துறையினர் கதைவிட்டார்கள். இதை ஹவ்வால பணத்தை காலையில் அதாவது முஹம்மத் அமீன் கைது செய்யப்பட்ட 9.30 மணிக்கு முன் டெல்லியுள்ள சாந்தினி சவுக் என்ற இடத்தில் ஒரு ஹவ்வாலா வியாபாரிடம் வாங்கியது சத்தியம் செய்து கூறினார்கள் டெல்லி சிறப்புக் காவலர்கள்.

ஆனால் டெல்லி சிறப்புக் காவலர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த காவலர்கள் சாட்சியங்கள் ஹவ்வாலா பணத்தை டெல்லியிலுள்ள ஆதார்ஸ் நகரில் வைத்து முஹம்மத் அமீன் வாங்கியதாகக் குறிப்பிட்டார்கள். தாங்கள் சொன்ன பொய் அம்பலமாகப் போனபோது டெல்லி சிறப்புக் காவலர்கள் அந்தர் பல்டி அடித்தார்கள். பணம் ஆதார்ஸ் நகரில் வைத்து வாங்கப்பட்டதுதான் என்றார்கள். அப்படியானால் நீங்கள் தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையில், சாந்தினி சவுக் எனக் குறிப்பிட்டிருக்கின்றீர்களே வழக்கறிஞர்கள் கேட்டபோது அது டைப்பிங் "மிஸ்டேக்" தட்டெழுத்துப் பிழை எனக் கூறி சமாளித்தார்கள் உங்களுடைய வாதங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. என்றார் நீதிபதி அவர்கள்.


அத்தோடு இந்தக் குழப்பத்தைத் தீர்த்திட நீங்கள் அந்த ஹவ்வாலா வியாபரியை நீதிமன்றத்தில் கொண்டுவந்து நிறுத்த முடியுமா? என்றார்கள் நீதிபதி! முடியாது என்றார்கள் டெல்லி சிறப்புக் காவலர்கள். இதனை கேட்ட நீதிபதி நீங்கள் அவரைக் கைது செய்யவில்லையா? எனக் கேட்டார்கள். இல்லை என்றார்கள் வழக்கை முஸ்லிம்கள் மீது ஜோடித்த காவலர்கள். இப்போது அவர்களும் அரசு வழக்கறிஞரும் தோட்டத்துத் தொழும்பர்களாக நின்று கொண்டிருந்தார்கள்.




- M.G.M